2 இலட்சம் விவசாயிகளுக்கு இயற்கை பசளை

2 இலட்சம் விவசாயிகளுக்கு இயற்கை பசளையை வழங்க தீர்மானம்

by Staff Writer 14-02-2021 | 3:28 PM
Colombo (News 1st) இம்முறை சிறு போகத்தில் 150,000 ஹெக்டேயர் நெற்செய்கைக்கு இயற்கை பசளையை வழங்குவுள்ளதாக உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் இரசாயன உரத்தை 30 வீதத்தால் குறைத்து அதற்கு பதிலாக இயற்கை பசளையை செய்கைக்காக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஸ் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். கடந்த இரு போகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகள் வெற்றியளித்ததாக அவர் கூறியுள்ளார். இதற்காக 2 இலட்சம் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டிருந்ததாக மகேஸ் கம்மன்பில தெரிவித்துள்ளார். இரசாயன உரத்தின் விலை குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக, அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.