English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
14 Feb, 2021 | 7:30 pm
Colombo (News 1st) நுகேகொடையில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தை நாளைய தினம் (15) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் காரியாலயத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர், டாக்டர் ஷவேந்திர கமகே தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க நாளை மருத்துவச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளவர்களுக்கு விடயம் தொடர்பில் தொலைபேசி வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தேசிய போக்குவரத்து மருத்து நிறுவனத்தின் காலி அலுவலகமும் மூடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய மாவட்டங்களிலுள்ள அலுவலகங்கள் வழமை போன்று இயங்குவதாக நிறுவனத்தின் தலைவர், டாக்டர் ஷவேந்திர கமகே தெரிவித்துள்ளார்.
19 Apr, 2022 | 11:11 AM
16 Mar, 2022 | 11:01 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS