கிராமத்துடன் கலந்துரையாடல்: ஜனாதிபதி மீமுரே கிராமத்திற்கு விஜயம்

by Staff Writer 13-02-2021 | 8:33 PM
Colombo (News 1st) கிராமத்துடன் கலந்துரையாடல் திட்டத்தின் 10 ஆம் கட்டம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கண்டி மாவட்டத்தின் மீமுரே கிராமத்தில் நடைபெற்றது. முதல் கட்டமாக மீமுரே கயிக்காவல கனிஷ்ட வித்தியாலயத்தில் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கு நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை மாணவர்களிடம் கையளித்தார். மீமுரேயில் உடுதும்பர வீதிக்கான இலங்கை ​போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.