ஏப்ரல் 21 தாக்குதல்: சட்ட மா அதிபர் அறிக்கை கோரல்

ஏப்ரல் 21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரதியை சட்ட மா அதிபர் கோரியுள்ளார்

by Staff Writer 12-02-2021 | 4:49 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்காகவே சட்ட மா அதிபர் இந்த கோரிக்கையை விடுத்ததாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.