பிலியந்தலை துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் இந்தியாவில் கைது

by Bella Dalima 11-02-2021 | 7:34 PM
Colombo (News 1st) 2017 ஆம் ஆண்டு பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேகநபரான மொஹமட் மாஹிர் மொஹமட் நவாஸ் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் இந்தியாவின் Interpol-இனால் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். குறித்த குற்றத்திற்காக உடந்தையாக இருந்த மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.