பங்குச் சந்தை பரிவர்த்தனை இரு தடவைகள் இடைநிறுத்தம்

பங்குச் சந்தை பரிவர்த்தனை இன்று இரண்டாவது தடவையாகவும் இடைநிறுத்தம் 

by Staff Writer 11-02-2021 | 12:57 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை இன்று (11) இரு சந்தர்ப்பங்களில் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. S&P SL விலைச்சுட்டி 7.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையால் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. முதலாவது சந்தர்ப்பத்தில் S&P SL விலைச் சுட்டி 2.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. இரண்டாவது சந்தரப்பத்தில் S&P SL விலைச் சுட்டி 05 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையால், பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.