ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு 

சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் 

by Staff Writer 11-02-2021 | 7:59 AM
Colombo (News 1st) ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (10) நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால், அலுவலக ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகம் ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு திணைக்களத்தினால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் த லைவர் சுமேத சோமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய தினத்திற்குள் ஏதேனும் தீர்வு காணப்படுமாயின், தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.