வெட்டி அகற்றப்படவிருந்த அரிய வகை மரம் புத்த சாசனத்திற்கு அர்ப்பணிப்பு

by Staff Writer 10-02-2021 | 8:26 PM
Colombo (News 1st) வெட்டி அகற்றப்படவிருந்த Crudia Zeylanica இனத்தை சேர்ந்த மரம் இன்று காலை புத்த சாசனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. தேசிய பிக்குகள் முன்னணியை சேர்ந்த தேரர்கள் சிலர் இன்று காலை பழமைவாய்ந்த மரம் அமைந்துள்ள தாரளுவ பகுதிக்கு சென்று மரத்தை புத்த சாசனத்திற்கு அர்ப்பணிக்க நடவடிக்கை எடுத்தனர். மத்திய அதிவேக வீதியின் கடவத்தை தொடக்கம் மீரிகம வரையான பகுதியில் அமைந்துள்ள இந்த அரிய வகை மரத்தை நிர்மாணப் பணிகளுக்காக அகற்றி வேறொரு இடத்தில் நடுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது. கம்பஹா ஹெனரத்கொட தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சில இடங்களில் இந்த வகை மரம் பாதுகாக்கப்பட்டு வருவதாக தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.