by Staff Writer 10-02-2021 | 4:53 PM
Colombo (News 1st) கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையின் சோதனை நடவடிக்கைகளுக்காக இன்று முதல் மீண்டும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக இந்த நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
புதிய மெகசின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கைதிகள், சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்கூடங்களில் விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை மேற்கொள்வார்கள் என சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.