அரசியல் கைதிகளாக யாரும் தடுத்து வைக்கப்படவில்லை - பிரதமர்

by Staff Writer 10-02-2021 | 2:22 PM
Colombo (News 1st) இலங்கையின் எந்தவொரு சிறையிலும் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் இன்று (10) முன்வைக்கப்பட்ட வாய்மொழி மூல வினாவிற்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.