பாடசாலைகள் மார்ச் 15 ஆம் திகதியே திறக்கப்படும்

அனைத்து பாடசாலைகளும் மார்ச் மாதம் 15 ஆம் திகதியே திறக்கப்படும்: கல்வி அமைச்சு 

by Staff Writer 10-02-2021 | 2:49 PM
Colombo (News 1st) கொழும்பு மாவட்டத்திலுள்ள 412 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், திட்டமிட்டவாறு எதிர்வரும் 15 ஆம் திகதி மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மார்ச் மாதம் 15 ஆம் திகதியே திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில் பெரேரா குறிப்பிட்டார்.