by Staff Writer 09-02-2021 | 8:39 AM
Colombo (News 1st) நாட்டில் புகையிலை மற்றும் மது பாவனை காரணமாக நாளொன்றில் 110 பேர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.
புகையிலை பாவனையினால் மாத்திரம் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் சமாடி ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.