தென் கொரிய வளர்ப்பு பிராணிகளுக்கு கொரோனா பரிசோதனை

தென் கொரியாவில் வளர்ப்புப் பிராணிகளுக்கு கொரோனா பரிசோதனை 

by Staff Writer 09-02-2021 | 10:50 AM
Colombo (News 1st) தென் கொரியா வளர்ப்பு பிராணிகளுக்கும் COVID - 19 பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது. கொரோனா அறிகுறிகள் காணப்படுமாயின் வளர்ப்பு பிராணிகளுக்கும் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்படும் என தென் கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பூனையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதிப்படுத்தப்படும் பிராணிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் ன அறிவுறுத்தப்பட்டுள்ளது.