தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்

by Staff Writer 09-02-2021 | 9:26 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று (09) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, 162 A காத்தான்குடி 06 தெற்கு கிராம சேவகர் பிரிவு, 162 B காத்தான்குடி 06 மேற்கு கிராம சேவகர் பிரிவு, 164 காத்தான்குடி 04 கிராம சேவகர் பிரிவு, 164 B காத்தான்குடி 05 வடக்கு கிராம அலுவலர் பிரிவு, 164 A காத்தான்குடி 05 கிராம சேவையாளர் பிரிவு, 164 C காத்தான்குடி 04 மேற்கு கிராம சேவகர் பிரிவு, 167 காத்தான்குடி 01 கிராம சேவகர் பிரிவு, 167 C புதிய காத்தான்குடி தெற்கு கிராம சேவகர் பிரிவு,  167 D காத்தான்குடி மேற்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் 167 E காத்தான்குடி மத்திய கிராம அலுவலர் பிரிவு ஆகியன இன்று (09) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தின் இஸ்மான் மாவத்தை, மீதெனிய கிராம சேவகர் பிரவிற்குட்பட்ட வரக்காபுர பிரதேசம் ஆகியவற்றிலும் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி 166 A கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மோதினார் வடக்கு, சின்னதோன வீதி, கபூர் பிரதேசம், டெலிகொம் வீதி, முதலாம் குறுக்கு வீதி மற்றும் பௌசி மாவத்தை ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.