சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி சிறுவன் பலி

சம்பூரில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

by Staff Writer 09-02-2021 | 4:15 PM
Colombo (News 1st) திருகோணமலை - சம்பூர், சந்தனவெட்டை பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். காட்டு யானைகளை தடுப்பதற்காக சட்டவிரோதமாக குறித்த வேலி இடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்திரன் ரஜீதன் என்ற 8 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதுடன், சடலம் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மின்சார வேலி இட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்