ஒரு வார காலத்தில் 45 பேர் உயிரிழப்பு

ஒரு வார காலத்தில் 45 பேர் உயிரிழப்பு

by Staff Writer 09-02-2021 | 1:47 PM
Colombo (News 1st) நாட்டில் வாகன விபத்துகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 6ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வார காலத்தில் இடம்பெற்ற விபத்துகளில் மாத்திரம் 45 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய நாளொன்றில் 6 அல்லது 7 பேர் விபத்துகளினால் உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆறு நாட்களில் இடம்பெற்ற விபத்துகளில் 266 பேர் காயமடைந்துள்ளனர். அதற்கமைய நாளொன்றில் 38 பேர் காயமடைவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கம்பஹா, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகமான வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.