by Staff Writer 08-02-2021 | 3:25 PM
Colombo (News 1st) இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்திற்குரிய 39 இலட்சம் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்று (08) நிறைவு செய்யப்பட்டுள்ளன.
சாட்சி விசாரணைகளின்றி தமது சேவை பெறுநரான மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி கொழும்பு மேல்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கை தொடர்பான கட்டளையை எதிர்வரும் 25 ஆம் திகதி பிறப்பிப்பதற்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெத்திகே தீர்மானித்துள்ளார்.