by Staff Writer 08-02-2021 | 10:13 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
தமக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை பாதுகாப்பு நேற்று (07) மாலை நீக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நியூஸ்பெஸ்டுக்கு உறுதிப்படுத்தினார்.