English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Feb, 2021 | 8:37 pm
Colombo (News 1st) 10 அம்சக் கோரிக்கைகளுடனான எழுச்சிப் பிரகடனத்துடன் அம்பாறை பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான மக்கள் பேரணி யாழ்ப்பாணம் – பொலிகண்டியில் நேற்று (07) மாலை நிறைவுபெற்றது.
பெருந்திரளான மக்களின் உணர்வுபூர்வமான பங்குபற்றுதலுடன் பேரணியின் இறுதி நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நீதிக்கான கவனயீர்ப்புப் பேரணியின் இறுதி நாள் பயணம் கிளிநொச்சியில் இருந்து சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஊடாக பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையை பறைசாற்றிய இந்தப் பேரணியில் சமயத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பேரணியில் பங்குபற்றியிருந்தனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான பேரணியின் நிறைவாக எழுச்சிப் பிரகடனமும் வாசிக்கப்பட்டது.
தமிழ் பேசும் சமூகம் எதிர்நோக்குகின்ற 10 முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வினை வலியுறுத்தும் கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.
எனும் 10 அம்ச கோரிக்கைகள் நீதிக்கான மக்கள் பேரணியின் போது முன்வைக்கப்பட்டன.
எழுச்சிப் பேரணியின் நினைவுக்கல் பொலிகண்டியில் நாட்டப்பட்டதை அடுத்து பேரணி நிறைவுபெற்றது.
08 Apr, 2021 | 05:58 PM
31 Mar, 2021 | 09:01 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS