by Staff Writer 07-02-2021 | 2:56 PM
Colombo (News 1st) புத்தளம் - கற்பிட்டி களப்பு பகுதியில் இன்று (07) அதிகாலை கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மஞ்சள் தீயிட்டு அழிக்கப்பட்டது.
புத்தளம் - கற்பிட்டி களப்பு பகுதியில் இன்று காலை இந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
போதைப்பொருள் ஒழிப்பபை் பணியக பிரிவினரால் 1,380 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.