இரு வாரங்களில் 2500 சுற்றுலாப் பயணிகள் வருகை

இரு வாரங்களில் 2500 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

by Staff Writer 07-02-2021 | 2:16 PM
Colombo (News 1st) விமான நிலையம் திறக்கப்பட்டு இரு வாரங்களில் சுமார் 2,500 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனிலிருந்து சுமார் 1,500 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க குறிப்பிட்டுள்ளார். கஸகஸ்தானிலிருந்தும் நேற்றைய தினம் (06) 160 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். அபிவிருத்தியடைந்த நாடுகளும் பல்வேறு சிரமங்களுடன் சுற்றுலாத் துறையை மீளவும் ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டிற்கு அழைத்து வரப்பட்டவர்களில் நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களின் தனிப்பட்ட செலவிலேயே சிகிச்சைகளை பெற்றுக் கொண்டதாகவும் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க மேலும் தெரிவித்துள்ளார்.