by Staff Writer 06-02-2021 | 3:10 PM
Colombo (News 1st) நான்கு கொரோனா மரணங்கள் நேற்று (05) உறுதி செய்யப்பட்டன.
பொகவந்தலாவை, மட்டக்குளி, நாவல மற்றும் கொழும்பு -03 ஆகிய பகுதிகளை சேர்ந்த 04 பேரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொரோனா தொற்றினால் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 729 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 67,844 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 61,461 பேர் குணமடைந்துள்ளனர். ஏனையவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மூன்று மாவட்ட அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்ட அலுவலகங்களே மூடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழகக்கோன் குறிப்பிட்டார்.
COVID நோயாளர்கள் வருகை தருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுகாதார தரப்பினரின் பரிந்துரைகளுக்கு அமைய விரைவாக நடவடிக்கைகளை வழமைக்கு திருப்ப எதிர்பார்ப்பதாகவும் சுமித் அழகக்கோன் தெரிவித்தார்.