343 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி

343 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 06-02-2021 | 7:24 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 343 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 68,193 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 1133 பேர் குணமடைந்த நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 62,594 ஆக உயர்வடைந்துள்ளது. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 5,256 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.