தோணி கவிழ்ந்ததில் காணாமற்போன இளைஞரின் சடலம் மீட்பு

காத்தான்குடி வாவியில் தோணி கவிழ்ந்ததில் காணாமற்போன இளைஞரின் சடலம் மீட்பு

by Staff Writer 06-02-2021 | 4:24 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவியில் தோணி கவிழ்ந்ததில் காணாமற்போன இளைஞரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (04) காணாமற்போன இளைஞரை தேடும் நடவடிக்கை கடற்படையினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு - மஞ்சந்தொடுவாய் ஹிஸ்புல்லாஹ் வீதியை சேர்ந்த 20 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். சிறிய தோணி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், தோணி கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச்செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.