SLTB-க்கு நாளாந்தம் 30 மில்லியன் ரூபா நட்டம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்தம் 30 மில்லியன் ரூபா நட்டம்

by Staff Writer 06-02-2021 | 3:35 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் 30 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். நாளாந்தம் 85 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என தெரிவித்துள்ள அவர், கொரோனா தொற்றுக்கு பின்னர் 55 மில்லியன் ரூபா மாத்திரமே நாளாந்த வருமானம் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார். பயணிகள் பஸ் போக்குவரத்தை தவிர்த்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க சுட்டிக்காட்டினார்.