பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இரண்டாவது நாளாகவும் முன்னெடுப்பு

by Staff Writer 04-02-2021 | 1:19 PM
Colombo (News 1st) தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்நிறுத்தி, முன்னெடுக்கப்படும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியின் இரண்டாம் நாள் மட்டக்களப்பு - தாழங்குடாவிலிருந்து இன்று (04) ஆரம்பமானது. மட்டக்களப்பு - தாழங்குடாவிலிருந்து இன்று ஆரம்பமான பேரணி காத்தான்குடி ஊடாக நகர்ந்து கொண்டிருப்பதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதன்போது நல்லாட்சிக்கான தேசிய மக்கள் முன்னணி தனது ஆதரவினை வழங்கியிருந்தது. மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிதிநிதிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிதிகள் என பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.