கடற்பிராந்தியங்களில் மழை பெய்யக்கூடும்

கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

by Staff Writer 04-02-2021 | 3:36 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பிராந்தியங்களை அண்மித்த பகுதிகளில் வலுவான மேகக்கூட்டங்கள் ஏற்பட்டுள்ளமையால், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, மீனவர்களும் கடற்சார் ஊழியர்களும் இந்த விடயம் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.