பாாராளுமன்ற சபை இன்று கூடுகின்றது

பாாராளுமன்ற சபை இன்று கூடுகின்றது

by Staff Writer 03-02-2021 | 8:27 AM
Colombo (News 1st) பாாராளுமன்ற சபை இன்று (03) கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று நண்பகல் 12.30 மணியளவில் நடைபெறவுள்ள கூட்டத்தில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்காக ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பில் பரிசீலிக்கப்படவுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற சபையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர். இதேவேளை, கட்சி தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள பிரேரணைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.