கரையோர மார்க்க ரயில் போக்குவரத்திற்கு இடையூறு 

கரையோர மார்க்க ரயில் போக்குவரத்திற்கு இடையூறு 

by Staff Writer 03-02-2021 | 8:52 AM
Colombo (News 1st) களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டதால், கரையோர மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. களுத்துறையிலிருந்து நீர்கொழும்பு வரை பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ரயில் தடம்புரண்டுள்ளதால், களுத்துறை மற்றும் பயாகலவுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து இடம்பெற மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.