by Staff Writer 03-02-2021 | 10:32 AM
Colombo (News 1st) கம்பளை - மேல் இங்குருவத்த பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (02) மாலை தமது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
தொழுவ - இங்குருவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.