சுதந்திர தின ஒத்திகை; இன்றும் போக்குவரத்து ஒழுங்கு

சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் 

by Staff Writer 02-02-2021 | 10:53 AM
Colombo (News 1st) 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் ஒத்திகை நடவடிக்கைகளினால் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்றும் (02) விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாளைய தினம் (03) வரை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதிக்குள் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தன்று அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனடிப்படையில், சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படவுள்ளதுடன், மேலும் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. இதனால் குறித்த காலப்பகுதிக்குள் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு இன்றும் போக்குவரத்து ஒழுங்குகள்