by Staff Writer 02-02-2021 | 2:51 PM
Colombo (News 1st) அரச சேவையில் மேலும் 8,500 பயிற்சி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதற்சுற்றில் அரச சேவையில் பயிற்சி பெறுவதற்கு தகுதி பெறாத மாணவர்களின் மேன்முறையீடுகளை பரிசீலித்ததன் பின்னரே, இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பட்டதாரிகளின் நியமனக் கடிதங்கள், அவர்களின் நிரந்தர வதிவிடத்தின் பிரதேச செயலாளருக்கு அனுப்பப்பட்டதாகவும் செயலாளர் கூறினார்.
அரச சேவைக்காக இதுவரை 50 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.