by Staff Writer 31-01-2021 | 6:09 PM
Colombo (News 1st) குறுங்கால பாவனைக்கான பொலித்தீன்களை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் தடை செய்து சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
தேசிய சுற்றாடல் சட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
வர்த்தகம், கைத்தொழில் உள்ளிட்ட விடயங்களுக்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன்களுக்கும் இதனூடாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழிலுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள பொலித்தீன்களை தவிர்ந்த ஏனைய அனைத்து விதமான பொலித்தீன்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மருந்துகள் மற்றும் உணவுப் பொதிகளை பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன்கள் தவிர்ந்த 20 கிராம் அல்லது அதனை விட குறைந்த நிறையுடைய அனைத்து வகையான பொலித்தீன்களுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது.