ஏக்கல வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

ஏக்கல வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

by Staff Writer 31-01-2021 | 1:56 PM
Colombo (News 1st) கொழும்பு - மினுவாங்கொடை பிரதான வீதியில் ஏக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (31) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ரத்தொலுகம, சீதுவ மற்றும் பமுனுகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரின் சடலங்களும் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.