நோர்வுட் பிரதேச சபை தலைவர் கைது

நோர்வுட் பிரதேச சபை தலைவர் கைது

by Staff Writer 30-01-2021 | 3:26 PM
Colombo (News 1st) நோர்வுட் பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, தாக்குதலுடன் தொடர்புடைய நபரை கைது செய்யுமாறு வலியுறுத்தி இன்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நோர்வுட் பிரதேச சபையின் தலைவர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.