மெத்தை தீப்பற்றி எரிந்தமையால் வயோதிபர் உயிரிழப்பு

வாழைச்சேனையில் மெத்தை தீப்பற்றி எரிந்தமையால் வயோதிபர் உயிரிழப்பு

by Staff Writer 29-01-2021 | 4:36 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாழைச்சேனையில் மெத்தை தீப்பற்றி எரிந்தமையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரதி வீதி, கருவங்கேணி பகுதியை சேர்ந்த 72 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் உறங்கிக்கொண்டிருந்த மெத்தையில் தீ பற்றியுள்ளது. தீயில் பலத்த காயமடைந்த நிலையில், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பற்றியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் வாழைச்சேனை பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.