பொதுமக்களுக்கு விமானப்படை விடுத்துள்ள வேண்டுகோள்

பொதுமக்களுக்கு இலங்கை விமானப்படை விடுத்துள்ள வேண்டுகோள்

by Bella Dalima 29-01-2021 | 4:53 PM
Colombo (News 1st) கொழும்பில் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை இடம்பெற்று வரும் நிலையில், விமானங்கள் தாழ்வாக பறக்க நேரும் என்பதால், இன்னும் சில நாட்களுக்கு பட்டங்கள், பலூன்கள், ட்ரோன்கள் போன்றவற்றை பறக்க விட வேண்டாம் என விமானப்படை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. பட்டங்கள், பலூன்கள், ட்ரோன்கள் என்பவை தாழ்வாகப் பறந்து ஒத்திகையில் ஈடுபடும் விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.