பிரகீத் எக்னலிகொடவிற்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 29-01-2021 | 6:55 PM
Colombo (News 1st) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவிற்கு நீதி கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு - காந்திபூங்கா முன்பாக ஊடக அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தன. உழைக்கும் ஊடக தொழிற்சங்க சம்மேளனம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.