துறைமுக ஊழியர் தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன

by Staff Writer 29-01-2021 | 6:44 PM
Colombo (News 1st) கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்காக துறைமுக ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளன. கிழக்கு முனையத்தின் 49 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துறைமுக அதிகார சபைக்கு முன்பாகக் கூடிய தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.