சிறைக்கைதிகளை உறவினர்கள் பார்வையிட சந்தர்ப்பம்

சிறைக்கைதிகளை உறவினர்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது

by Staff Writer 29-01-2021 | 3:34 PM
Colombo (News 1st) எதிர்வரும் முதலாம் திகதி முதல் சிறைக்கைதிகளை நேரில் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, விளக்கமறியல் கைதிகளை அவர்களது இரத்த உறவுகள் நேரில் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. வாரத்தில் ஒரு நாளில் மாத்திரம் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகளை பார்வையிட வருகை தரும் உறவினர்கள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உணவுப் பொருட்களை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமலிருக்கவும் ஆடைகளை மாத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு மாதமொன்றில், ஒரு நாளில் மாத்திரம் தமது உறவினர்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்