by Staff Writer 29-01-2021 | 5:38 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இன்று மேலும் 963 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 55,398 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 61,596 ஆக பதிவாகியுள்ளது.
இவர்களில் 5,891 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்றினால் 297 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.