English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 Jan, 2021 | 4:43 pm
Colombo (News 1st) அம்பாறை – உஹண பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணைகளுக்காக கந்தளாயிலிருந்து அம்பாறைக்கு வருகை தந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதன்போது, குறித்த நபர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதான யுவதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உஹண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
20 Mar, 2021 | 03:09 PM
27 Feb, 2021 | 03:05 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS