கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

by Staff Writer 28-01-2021 | 10:04 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - படுவான்கரை, கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.