அமெரிக்காவில் உள்நாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல் 

அமெரிக்காவில் மீண்டும் உள்நாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கை

by Staff Writer 28-01-2021 | 9:33 AM
Colombo (News 1st) அமெரிக்காவில் மீண்டும் உள்நாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் அதிருப்தி கொண்டுள்ளவர்களால் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க பாதுகாப்பு உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 6 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் போன்று தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்க உள்ளக பாதுகாப்புத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் தாக்குதல் நடத்தப்பவுள்ளதாக தகவல் எதுவும் வௌியிடப்படவில்லை எனவும் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களினால் காங்கிரஸ் கட்டடத்தின் மீது தாக்குதல் தாக்கப்பட்டதுடன், தாக்குதல்களினால் ஐவர் உயிரிழந்தனர். தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் ட்ரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன் அவர் மீது கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை தொடர்பில் அடுத்த மாதம் முதல் பகுதியில் செனட் சபையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.