மாணவர்கள், ஆசிரியர்களுக்கான அறிவித்தல் 

மேல் மாகாணத்திற்கு வௌியே வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான அறிவித்தல் 

by Staff Writer 27-01-2021 | 9:58 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்திற்கு வௌியே வசிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்கான அனுமதியை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏனைய மாகாணங்களுக்கோ அல்லது மேல் மாகாணத்தின் மாவட்டங்களுக்கிடையே நாளாந்தம் பயணிப்பது அத்தியவசியமற்றது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறான பயணங்களுக்காக சுகாதார பிரிவினால் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.