தடுப்பூசி நாளை நாட்டிற்கு

தடுப்பூசி நாளை நாட்டிற்கு

by Staff Writer 27-01-2021 | 11:40 AM
Colombo (News 1st) இந்திய அரசாங்கத்தினால் நாட்டிற்கு அனுப்பப்படும் AstraZeneca COVISHIELD தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் நாளை (28) முற்பகல் 11 மணியளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தடுப்பூசிகளை 250,000 பேருக்கு வழங்க முடியும் என இலங்கைக்கு COVID - 19 தடுப்பூசியை கொண்டுவருவது தொடர்பான குழுவின் தலைவர், ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.