by Staff Writer 26-01-2021 | 8:23 AM
Colombo (News 1st) ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் 9ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கடந்த கால தீர்ப்புகளை ஆராய்ந்து, ரஞ்சன் ராமநாயக்கவின் விவகாரத்திற்கு தீர்மானம் எடுக்கவுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த 12 ஆம் திகதி 04 வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.