மணல் விலையைக் கட்டுப்படுத்த அரசின் தலையீடு அவசியம்

மணல் விலையைக் கட்டுப்படுத்த அரசின் தலையீடு அவசியம்: மஹிந்த அமரவீர

by Staff Writer 26-01-2021 | 5:17 PM
Colombo (News 1st) மணல் விலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசாங்கத்தின் தலையீடு அவசியமென சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மணல் வியாபாரத்தில் ஈடுபடும் சங்கங்கள் சிலவற்றுடன் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் முழுமையான தலையீட்டுடன் மணல் விநியோகம் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி செயலணி பரிந்துரைத்துள்ளது. ஏனைய வகை மணலை மணம்பிட்டி மணல் என தெரிவித்து மக்களிடையே விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மணம்பிட்டியவில், 14,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் மணல், சந்தைகளில் 3 கியூப் 55,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாவிடின், மணல் விலை 60,000 ரூபா வரை அதிகரிக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.