நாளாந்தம் 20,000 PCR பரிசோதனைகள்

நாளாந்தம் 20,000 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

by Staff Writer 26-01-2021 | 7:11 AM
Colombo (News 1stt) நாளாந்தம் சுமார் 20,000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நாளொன்றில் 10,000 PCR பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் 40 வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். 5 தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை, கேகாலை மற்றும் களுத்துறை வைத்தியசாலைகளில் PCR பரிசோதனை கூடத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.