இந்தியாவிலிருந்து 5 இலட்சம் தடுப்பூசி நாட்டிற்கு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள கொரோனா தடுப்பூசி

by Staff Writer 26-01-2021 | 1:24 PM
Colombo (News 1st) இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒக்ஸ்பர்ட் அஸ்ட்ரா செனக்கா கொவிட் - 19 தடுப்பூசி (Oxford Astrazeneca Covishield) நாளை மறுதினம் (28) நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அறிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை துறைசார் அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். இலங்கை மற்றும் இந்தியா இடையே நிலவும் நீண்டகால உறவு மற்றும் COVID - 19 தொற்று நிலமையை எதிர்கொண்ட போது கடந்த ஒரு வருடத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட ஒத்துழைப்புகளுக்கு அமைய COVID - 19 தடுப்பூசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 5 இலட்சம் Oxford Astrazeneca Covishield தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.